2025 மே 01, வியாழக்கிழமை

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் இதுவரை காலமும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றியவர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா இந்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதுவரை காலமும் சமூர்த்தி அதிகார சபையின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கு முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஆட்சேர்த்துக்கொள்ளல் மற்றும் பதவியுயர்வு முறைகளை அங்கீகரித்ததாக குறிப்பிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 01.12.2013ஆம் திகதி முதல் அமுலில் உள்ளவாறு முகாமைத்துவ உதவியாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .