2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நூலகத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் நேற்று சனிக்கிழமை சிறுவர் நூலகத்திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நடத்தப்பட்டன.

குருக்கள்மடம் பொது நூலகக் கட்டிடத்தில் கலைவாணி வாசகர் வட்டத்தின் தலைவர் க.ஞானசேகரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, கோ.கருணாகரம், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர் வ.யாகேஸ்வரி, காரைதீவு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் பி.நிருபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்ட அதேவேளை, நூலகத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கமும் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, குருக்கள்மடம் கிராமத்திலிருந்து இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பரிசில்கள்; வழங்கப்பட்டன.

இதன்போது பிரதேச சபை செயலாளரினால் இந்நூலகத்திற்கு கணினி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .