2025 மே 01, வியாழக்கிழமை

பிரதி பொலிஸ் மா அதிபர் கருணாரட்ண கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் 12ஆவது பிரதி பொலிஸ் மா அதிபராக இந்து கருணாரட்ண இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுள்ளார்.

இதன் முதல் நிகழ்வாக பொலிஸ் வளாகத்தில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதனையடுத்து மரியாதை செலுத்திய பொலிஸாரின் நிலை மற்றும் உடைகளைப் பார்வையிட்டார். இதன் பின்னர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பிரதி பொலிஸ் மா அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான லால் செனவிரட்ண, ரட்நாயக்கா, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராச்சி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டு. மாவட்டத்தின் 11ஆவது பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வி.இந்திரன் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .