2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில்  கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று,  வீதியோரத்தில் உரையாடிக்கொண்டு நின்ற இருவர் மீது மோதியதில் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் படுகாயமடைந்தனர்.

காத்தான்குடி 2ஆம் குறிச்சியை சேர்ந்த எம்.ஏ.கரீம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (11) வீடு திரும்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .