2025 மே 01, வியாழக்கிழமை

இந்திய புடைவை வியாபாரியை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாட்டின் சின்னாலப்பட்டி, அஞ்சலை கொலனியைச் சேர்ந்த டபிள்யூ.பலராமன் (வயது 39) என்ற வியாபாரியை மிரிஹானவிலுள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு வாழைச்சேனை மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி நேற்று செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.

வீடொன்றில் தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபடுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  இந்த வியாபாரியை வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியில்  நேற்றையதினம்  கைதுசெய்ததாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 03 வாரங்களாக புதுக்குடியிருப்புப் பகுதியில் இவர் நடமாடித் திரிந்தார் என்று  பொதுமக்கள் கூறியதாகவும்  பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .