2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிங்களமொழி மூல பொலிஸாருக்கு தமிழ் டிப்ளோமா பயிற்சி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

சிங்களமொழி மூலமான  பொலிஸாருக்கான 05 மாதகால தமிழ்மொழி டிப்ளோமா பயிற்சிநெறி கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை (17) ஆரம்பமானது.

இந்நிலையத்தினால் நடத்தப்படும் 08ஆவது பயிற்சிப் பிரிவில் மட்டக்களப்பு பிரதேச பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் 111 பொலிஸார் பங்குபற்றுகின்றனர்.

இப்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி க.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, கட்டானை பொலிஸ் நிலைய தமிழ்பாடநெறி பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். செல்வராஜா, காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, கல்லடி பொலிஸ் பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X