2025 மே 01, வியாழக்கிழமை

வாவிக்கரை பூங்கா திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
, தேவ அச்சுதன்

நகர அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வாவிக்கரைப் பூங்கா  திங்கட்கிழமை (016)  திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ்,  20 மில்லியன்  ரூபா செலவில் இப்பூங்கா அமைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க  அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர அபிவிருத்தியில் இது ஒரு மைல் கல் ஆகும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாநகரசபையின் உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொறியியலாளர் பி.அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .