2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைத்தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


கோறளைப் பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரின் தொழில் முயற்சியை மேலும் வளப்படுத்தும் முகமாக, ஒரு தொகுதி கைத்தொழில் உபகரணங்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். 

கிரான் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.தனபால் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.இரவிந்திரன், திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது 75 விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களும் 25 தச்;சுதொழில் புரிவோருக்கான தச்சு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .