2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 29 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றுக்கு செல்லும் ஒழுங்கையிலிருந்து வெடிக்காத கைக்குண்டொன்றை  ஞாயிற்றுக்கிழமை  (29) காலை மீட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஒழுங்கையில்  கைக்குண்டொன்று காணப்படுவதாக  காத்தான்குடி பொலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று கைக்குண்டை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .