2025 மே 02, வெள்ளிக்கிழமை

பல சரக்கு விற்பனை நிலையமொன்றில் கொள்ளை

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் பல சரக்கு விற்பனை நிலையமொன்று நேற்று (4) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒல்லிக்குளம் பிரதான வீதியிலுள்ள இந்த பல சரக்கு விற்பனை நிலையம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பால்மா பக்கட்டுக்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் முப்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X