2025 மே 02, வெள்ளிக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டெல்லி பயணமானார்

Kanagaraj   / 2014 ஜூலை 07 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும் தென் கிழக்காசிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ கொள்கை வகுப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் க.இன்பராஜன் நேற்று டில்லி பயணமாகியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை  நடைபெறவுள்ள இம் மாநாட்டில், சார்க் நாடுகளின் பிரதிநிதிகள்; பங்கேற்று தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ கொள்கை வகுப்பில் கலந்து கொள்கின்ற நிலையில் இலங்கையில் இருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சார்பாக இவர் பங்கேற்றுள்ளார்.

இலங்கையில் இருந்து இவர் மாத்திரமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X