2025 மே 02, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி விவசாயி காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 15 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்தானை வயல்வெளியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான  விவசாயியான காவத்தமுனையைச் சேர்ந்த அலியார்சாலி அக்பர் (வயது 51) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.  

வயல்வெளியிலுள்ள காவல் குடிசையில் இவர் உறக்கத்திலிருந்தபோதே, நேற்று திங்கட்கிழமை  (14) நள்ளிரவு யானையின் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.  

உடனடியாக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X