2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள  02 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு  சுயதொழில் உபகரணங்கள் நேற்று புதன்கிழமை  (16)  வழங்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில், ஒவ்வொருவருக்கும்  5,000  ரூபாய்  பெறுமதியான  காலை உணவு தயாரிக்கும் உபகரணங்கள்  வழங்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.சசிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X