2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திவிநெகும வாழ்வாதார கருத்தரங்கு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிநெகும வாழ்வாதார கருத்திட்டத்தின், விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான முகாமைத்துவ பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (08) கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம், மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவபாதசேகரம்,கோறளைப்பற்று பிரதேச செயலக வங்கி முகாமையாளர் கோ.லதா, கருத்திட்ட முகாமையாளர் திருமதி எஸ்.தமிழ்வானி, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன்போது திவிநெகும வாழ்வாதார கருத்திட்டத்திற்கு இவ்வருடம்  கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 235 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X