2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலையில் விபத்து: ஒருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திற்கு எதிரே முச்சக்கரவண்டி ஒன்றுடன்  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதுண்டதால் இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பொது மக்களால் மீட்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகி;சசைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X