2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில்  நடைபெற்றது.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் திவிநெகும 6ஆம் கட்ட செயற்றிட்டம், 2014ஆம் ஆண்டுக்கான திவிநெகும 50 பயனாளிகளுக்கான முன்னேற்ற அறிக்கை, திவிநெகும சாத்தியவள அறிக்கை, வங்கி மற்றும் மகா சங்கங்களின் முன்னேற்ற அறிக்கைகள், திரியபியச மற்றும் சமூக அபிவிருத்தித்திட்டம், ஜாதிகசவிய, கமநெகும சுழற்சி நிதிய அறவீடு தொடர்பான அறிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும் திவிநெகும 6ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல், திட்டங்களைத் தெரிவுசெய்தல், அவற்றை நடைமுறைப்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,  திவிநெகும பிரதி பணிப்பாளர் பி.குணரெட்ணம், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட விவசாயப்பணிப்பாளர் பி.உகநாதன், மாவட்ட மற்றும் பிரதேச திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X