2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆஸி.நாட்டு முறிவு வைத்திய நிபுணர்- ஆயர் சந்திப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்புக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) வருகை தந்த அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு கட்டடம், நவீன முறையில் நிர்மாணிக்க முன் வந்தமைக்காக, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அவுஸ்திரேலியா நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பாக குழுவினர் ஆயருக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது சென் ஜோன் அம்பியுலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தேசமான்ய ஏ.எல்.மீராசாகிபுவினால்; சென் ஜோன் அம்பியுலன்ஸ் இலட்சனை பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டினையையும் குழுவினருக்கு வழங்கிவைத்தார்.

இதில் பியப் அமைப்பின் முக்கியஸ்தரும் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வட்மோர் மற்றும் அந்த குழு உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை, மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா உட்பட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X