2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,தேவ அச்சுதன்


வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி பயனாளிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பி.குணரெட்ணம், கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சண்முகலிங்கம், வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரக் கருத்திட்டங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரத் திட்டங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் த.சத்தியசீலன் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X