2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  சுயதொழிலை  வழிகாட்டும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சுயதொழில் பயிற்சியை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான   சல்மா ஹம்சா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பார்வையிட்டார்.

தோலினால் சப்பாத்துக்கள் மற்றும் பைகளை    உற்பத்தி செய்யும்  இந்த சுயதொழில் பயிற்சி கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 20 நாட்களைக் கொண்ட இந்தப் பயிற்சி எதிர்வரும்; 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த சுயதொழில் பயிற்சியில் 22 பெண்கள் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தினுடைய ஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் அனுசரணையுடன் சுயதொழில் நடவடிக்கையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பால் இந்த சுயதொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது.

இந்தப் பயிற்சியின் முடிவில் இவர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் என  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X