2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து இளம் குடும்பஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரை பிரதேசத்தில் தற்செயலாக கட்டுத்துவக்கு ஒன்று வெடித்ததினால், காயமடைந்த கிருமிச்சையைச்  சேர்ந்த இளம் குடும்பஸ்தரான  ம.மஞ்சுதன் (வயது 21) என்பவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X