2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சி பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்  தொடர்பில் ஆராயும் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  நடைபெற்றது.

இதன்போது வரட்சி காரணமாக தற்போதுள்ள நிலைமை தொடர்பிலும் இதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தன்மை,  எதிர்காலத்தில் இவற்றைக் குறைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன.

எதிர்காலத்தில் வறட்சிப் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் உரிய திணைக்களங்களிடமிருந்து ஆலோசனைகளும் திட்ட முன்மொழிவுகளும் பெறும் வகையிலான விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பொருளாரதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்  மாயாதுன்ன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் வாரங்களிலிருந்து வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X