2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்றினுள் விழுந்த முச்சக்கரவண்டி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


புதுப்பால வீதியில்;  இன்று திங்கட்கிழமை (18) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி  ஒன்று வீதியை   விட்டு விலகிச்சென்று மட்டக்களப்பு  ஆற்றினுள் விழுந்தது.

இந்த முச்சக்கரவண்டியில் பயணித்த 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டிச் சாரதியான  மட்டக்களப்பை சேர்ந்த ரபாயல் வின்சன் (வயது 60),  நிந்தவூரைச் சேர்ந்த ஏ.எம்.காசிம், எஸ்.சுஜீதா ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முச்சக்கரவண்டி பொலிஸார் மற்றும் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X