2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிங்கள மொழி கற்பிக்கும் நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணிபுரியும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்பிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) மட்டக்களப்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் ஆலோசனைக்கமைய தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்படும் 12 நாட்கள் கொண்ட இப்பயிற்சியில் 100 உத்தியோகத்தர்கள் பங்குபற்றியுள்ளதாக நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் ஜி.கோபிநாத் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டின் தேசத்திற்கு மகுடத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 120 உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இலங்கையில் இவ்வருடம் 200 தமிழ் ஊழியர்களுக்கு சிங்களமும் 700 சிங்கள ஊழியர்களுக்கு தமிழுமாக 900 அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ்,சிங்களம் கற்பிக்கும் செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினைச் சேர்ந்த எஸ். அல்பட், லீதா பிரியந்த, எஸ். ஏம். சமரசிங்க ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சி நெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X