2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காந்திபுரம் கிராமத்துக்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, காந்திபுரம் கிராமத்துக்கு 11.8 மில்லியன் ரூபாய் செலவில் நேற்று சனிக்கிழமை (13) மாலை மின்விநியோகிக்கப்பட்டது.

காந்திபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இ.கோணேஸின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  களுவாஞ்சிக்குடி பிரதேச மின்சாரசபை அத்தியட்சகர் கே.அனுசாந்,  மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன், பொதுக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மின்விநியோகத்தின் மூலம் காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 225 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச மின்சாரசபை அத்தியட்சகர் கே.அனுசாந் தெரிவித்தார். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X