2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 30 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் சந்தியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்ற  விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆதித்தன் (வயது 36),  விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகியோரே மரணமடைந்தனர்.

இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையோரத்திலுள்ள  மின்கம்பமொன்றுடன் மோதியது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X