Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 30 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை பூர்த்திசெய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு, கலாசாலை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது.
2013 – 2014ஆம் ஆண்டு பயிற்சியை பூர்த்திசெய்த 45 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக விஞ்ஞான பாடத்துக்கு 05 பேருக்கும் ஆங்கிலப் பாடத்துக்கு 16 பேருக்கும் விஞ்ஞானப் பாடத்துக்கு 11 பேருக்கும் கணித பாடத்துக்கு 13 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன், சிறந்த அடைவு மட்டங்களை பெற்றவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி ரி.புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025