2025 மே 19, திங்கட்கிழமை

எதிரணியில் அமர்ந்த ஐ.ம.சு.கூ.வினர்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண சபை அமர்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஆரம்பித்தபோது, ஆட்சி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 11 மாகாண சபை உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டனர்.

இந்த 11 மாகாண சபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவாறு செயற்படத் தொடங்கினர்.

நேற்றைய அமர்வில் ஆளும் கட்சிகளைச் சேர்ந்த மூவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவருமாக மொத்தம் ஆறு பேர் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X