2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை மாவட்ட முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு  கூறியும் அறிக்கையொன்றை  இன்று வியாழக்கிழமை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம்  கையளித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.எ.ஜி.முபாறக் தலைமையில் வந்த குழுவினர், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் முதலமைச்சரைச் சந்தித்தனர்.

இதன்போது,   முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுச்சின்னத்தை முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் வழங்கி வைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், சிப்லி பாறூக், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் இதன்போது வருகை தந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X