2025 மே 19, திங்கட்கிழமை

மகாமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத பவனி

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு கோட்டைமுனை மகாமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத பவனி வியாழக்கிழமை (02) நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் பிள்ளையார், மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேதர சுப்பிரமணியர், சிவன் பார்வதி மற்றும் சண்டேஸ்வரி ஆகிய சுவாமிகளுக்கு அலங்கார பூஜை இடம்பெற்று, பின்பு சுவாமிகள் உள்வீதி வலம் வந்து பஞ்ச ரதங்களில் ஆரோகணித்தும் வீதி உலா ஆரம்பமானது.

ஆலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பாடும் மீன் வீதி, பயணியர் வீதி, பெயிலி வீதி, சென் செபஸ்தியார் வீதி, பொற்தொழிலாளர் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தன.

வருடாந்த மஹோற்சவத்தின் கிரியைகள் மஹோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ வரதகோபால சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.

வருடாந்த மஹோற்சவம் கடந்த (25.03.2015) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X