2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரயில் மோதி இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயில் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மாவடிவேம்பு பகுதியில் வசித்துவந்த  பத்மநாதன் சதீஸ்கரன் (வயது 22) என்பவரே மரணமடைந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X