2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற  மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயம், பெருமாவெளி விஸ்ணு வித்தியாலயம், பெரியவட்டவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே  இலவசமாக அப்பியாசக் கொப்பிகள்  வழங்கப்பட்டன.

லண்டனிலுள்ள கனக துர்க்கை ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வழங்கி வைத்தார்.

ஏறாவூர்ப்பற்று -2 கோட்டக் கல்வி அதிகாரி பி.சிவகுரு, ஆரம்பக் கல்வி இணைப்பாளர் கே.யோகராசா மற்றும் பேரவை பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X