2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஏறாவூர் அக்னி இசைக்குழுவின் 15ஆவது நிறைவு தினம்

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் அக்னி இசைக்குழுவின் 15ஆவது நிறைவையொட்டி சனிக்கிழமை (25) தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வைபவம் ஏறாவூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழ், முஸ்லிம்; ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் என 20 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .