2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பஸ் மோதி முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

கல்முனையிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ், சின்ன உப்போடை லேக் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி வீதியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கல்லடி திருச்செந்தூர் வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதியான ஜெயசிலன் பிpயமர்சன் வயது (19) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .