2025 ஜூலை 14, திங்கட்கிழமை

10 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு தலா 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான  10 வீடுகள் கையளிக்கப்பட்டன.

சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால், மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி  நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் பூர்த்தியான 10 வீடுகளே முதற்கட்டமாக அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு  காத்தான்குடியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வு, ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  வீடுகளுக்கான சாவிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .