Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம் நடத்திய மாபெரும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள இந்து மகளிர் மன்ற கட்டடத்தில், மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம் ஆகியவற்றுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட திருக்குரல் மனனம் செய்யும் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் திருக்குரலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் வகையில் இந்த போட்டிகள், பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago