2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இடதுசாரி முன்னணி கட்சித்தலைவர் மீது தாக்குதல்

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட இடதுசாரி முன்னணி கட்சித்தலைவர் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு பார்வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவர் மட்டக்களப்பு பார்வீதியால் சென்று கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு திடீரென வந்த நபரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கட்சி நடவடிக்கைகளை சகிக்கமுடியாத நபரினாலேயே தான் தாக்கப்பட்டதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுந்தரேசன் தெரிவித்தார்.

மட்;டக்களப்பு மாவட்டத்தில் சிரேஸ்ட அரசியல்வாதியான சுந்தரேசன் கடந்த 1994ஆம் ஆண்டு கம்யுனிஸ்ட்கட்சி சார்பாக பொதுசன ஐக்கிய முன்னணியில் நாடாளுமன்ற தேர்தலில் போடடியிட்டதுடன், கம்யுனிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நீணடகாலம் பணியாற்றியுள்ளதுடன், மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைககளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசபரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .