2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

19க்கு த.தே.கூ ஆதரவளிக்கும்: செல்வராசா

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

19ஆவது திருத்தச்சட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் என தமிழ்க் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

19ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

19ஆவது திருத்தச்சட்டத்தை சட்டம் எந்த இனத்துக்கு நன்மை என்பதை விட இந்த நாட்டுக்கு மிக முக்கியமானதாக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பயன்படுத்தி சிறுபான்மை இனத்தை நசுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அமைக்கப்படும் சுயாதீன ஆணைக்குழுக்கள், தலையீடுகள் இன்றி சுயமாக செயற்படக்கூடிய நிலையும் ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .