2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு முதல்வரினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்னால், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று  செவ்வாய்க்கிழமை (28) காலை பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் எனும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 15,000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் உட்பட அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது புதிய காத்தான்குடியில் தையல் பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், பல நோக்கு மண்டபம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அத்துடன் வடிகான் நிர்மாணத்துக்கான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் 18 அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் ஒவ்வொரு திட்டத்துக்கும் பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .