2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது: 8 பேர் தப்பியோட்டம்

George   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை செவ்வாய்க்கிழமை(28) இரவு கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் ஏனைய 8 பேர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிகலைக் காட்டுப்பகுதியிலிருந்து இவை கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சுமார் 10 அடி நீளமுள்ள 36 தேக்கு மரக்குற்றிகள் 9 சைக்கிள்களில் ஏற்றி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சந்தேக நபரை மரக்குற்றிகளுடன் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் 75 ஆயிரம் ரூபாய் எனவும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .