2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாவியில் குதித்த இளைஞன் மீட்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து வாவியில் குதிக்க முயற்சி செய்ய 22 வயதுடைய இளைஞனை நேற்று புதன்கிழமை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த இளைஞன் பாலத்திலிருந்து வாவியில் குதிப்பதை கண்ட மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியும் வாவியில் குதித்து குறித்த இளைஞனை காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட குறித்த இளைஞர் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .