2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பேர்லின் பயணமானார் சல்மா ஹம்ஸா

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா ஹம்ஸா ஜேர்மன், பேர்லினுக்கு நேற்று புதன்கிழமை இரவு  பயணமானார்.

'இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பும் போரின் பின்னரான சூழலில் பெண்களின் பாத்திரம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளும்' எனும் தலைப்பில் எதிர்வரும் 2ஆம் திகதி ஜேர்மன் பேர்லினில் நடைபெறுகின்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் பேர்லினுக்கு பயணமானார்.

மேற்படி மாநாடு 2ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .