2025 மே 17, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

இளைஞர்களுக்கு வலுவூட்டும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (02) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.எல்.எம். நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 15 கழகங்களுக்கிடையே மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டி இடம்பெற்றதுடன், தொழில் வழிகாட்டல் காட்சிக் கூடம், பயிற்சிக் கூடம், தொழில் வழிகாட்டல் சார்ந்த கருத்துரை வழங்கும் கூடம் என்பனவும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான சிப்லி பாறுக், எம்.எஸ். சுபைர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .