2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில்   மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காக குருநாகலிலிருந்து புறப்பட்டுச்  சென்றுகொண்டிருந்த இவர்களின்  வான்,  பாதையை விட்டு விலகிச்சென்று  மின்கம்பமொன்றுடன் மோதியுள்ளது.

இந்த வானில் பயணித்த சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில்  ஒருவர்  சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .