2025 மே 16, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் படுகாயம்

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் மஞ்சள் கடவையினூடாக வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவரை மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள மஞ்சட்கடவையினூடாக வீதியை கடக்க முற்பட்ட 55 வயதுடைய பெண்ணை, இன்று சனிக்கிழமை (30)  காலை 11.20 மணியளவில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இப் பெண், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .