2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்துவைப்பு

Gavitha   / 2015 மே 31 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜதுர் றஹ்மா பள்ளிவாயலின் புதிய கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டது.

சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த அஸ்ஸெய்ஹ் துருக்கி பின் ஜாபீர்  உஸைரின்  தலைமையிலான பிரமுகர்கள் இந்த பள்ளிவாயலின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர்.

பள்ளிவாயல் தலைவர் எம்.றவூப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அஸ்ஸெய்ஹ் ஐ.எல்.எம்.காஸீம் ஸூரி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துஸ் ஸஹ்வா அல் ஹைரியா எனும் அமைப்பினால் சவுதி அரேபிய தனவந்தர்களின் நிதியுதவியுடன் இந்த பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .