2025 மே 16, வெள்ளிக்கிழமை

புகைத்தலுக்கு எதிராக பேரணி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்

புகைத்தல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையம்  ஏற்பாடு செய்த புகைத்தலுக்கு எதிரான பேரணியொன்று இன்று (05) வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில்  நடைபெற்றது.

இந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜெயசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அதிகாரிகள், மாணவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக சபை மண்டபத்தை சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .