2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி யுவதி பலி

Kogilavani   / 2015 ஜூன் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

ஏறாவூர், வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.  

களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (வயது-26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இருவரும் களுவன்கேணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .