2025 மே 15, வியாழக்கிழமை

சிறுவனைத் தாக்கிய நபர் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் நகரில் சிறுவனைத் தாக்கிய நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (28) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஏறாவூரில் பேரீச்சம் பழங்களைப் பெற வந்த சிறுவனை குறித்த நபர் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .