2025 மே 15, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வீச் றோட் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 28 வயதுடைய ஒருவர்   திங்கட்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் 22  கிராம் கஞ்சாவுடன் 45 வயதுடைய  சந்தேக நபர் ஒருவர்  திங்கட்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தமக்கு கிடைத்த தகவலை அடுத்து  திடீர்ச் சோதனை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .