Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் தெரிவின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விவேகமற்ற முறையில் வேட்பாளர் தெரிவினை மேற்கொண்டதனால் இம்முறை பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீல.மு.கா.வுக்கு எந்தவொரு பிரதிநிதியும் தெரிவாக வாய்ப்பில்லை என கட்சியின் ஏறாவூர் கிளை கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் பாபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா.வின் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் கட்சிக்குப் புதியவர்கள், மக்கள் செல்வாக்கற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க அவர்கள் கடந்த காலங்களில் ஸ்ரீல.மு.கா.வை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள.; விவேகமற்ற வேட்பாளர் தெரிவின் காரணமாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உறைந்து போயுள்ளார்கள். இந்த அதிருப்தியின் வெளிப்பாட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா.வின் பிரசாரங்கள் இதுவரை இடம்பெறவில்லை.
அதேவேளை, வேட்பாளர் தெரிவில் அக்கட்சியின் பிரதித் தலைவரான கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம் கூட ஆலோசனை பெறப்படவில்லை என்ற நிலைமை பெரும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. இந்த நிலைமைகள் காரணமாக இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா. தோல்வியடைவதோடு எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் அதன் அடையாளத்தையும் இழக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
1 hours ago